உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்
காந்திநகர் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் பள்ளியில் ரத்ததான முகாம்
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்திநகர் ஏ.வி.பி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமில் திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி மெடிக்கல் கேம்ப் தலைவர் அருள்செல்வம், ரோட்டரி ஐ.எம்.ஏ. ரத்த வங்கி டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கே.கணேசமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ரத்த தானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஏ.கார்த்திகேயன், பொருளாளர் லதா கார்த்திகேயன், முதல்வர் ஐ.டயானா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை இண்டராக்ட் கிளப் மற்றும் சாரண-சாரணியர்கள், இயக்க மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.