உள்ளூர் செய்திகள்

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு கட்டிட பணியை தொடங்கி வைத்த காட்சி.

சாலை மேம்பாடு‍ பணிக்கு பூமிபூஜை

Published On 2022-07-14 11:01 GMT   |   Update On 2022-07-14 11:01 GMT
  • திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார்.
  • ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍,சிறு பாலம் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

திருப்பூர் :

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு ஒத்தக்கண் பாலம் பகுதியில், ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலை மேம்பாடு‍, வடிவியல் மேம்பாடு, சிறு பாலம் கட்டுதல் மற்றும் வடிகால் கட்டுதல் ஆகியவற்றிற்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து கட்டிட பணியை தொடங்கி வைத்தார். மேயர் தினேஷ்குமார் , 3-வது மண்டல தலைவர் கோவிந்தசாமி, திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ், மாமன்ற உறுப்பினர்கள், பகுதி ,வட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News