உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் அருகே ரூ.19.54 லட்சம் திருட்டு வழக்கில் மேலும் ஒரு வாலிபர் கைது

Published On 2023-05-13 04:48 GMT   |   Update On 2023-05-13 04:48 GMT
  • அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார்.
  • ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் :

ஈரோடு மாவட்டம் கொடுமுடி நல்லசெல்லி பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர்,47; பருப்பு வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,45 என்பவரிடம் பொள்ளாச்சியில் பருப்பு விற்ற பணத்தை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இவர் கடந்த மாதம், 27ல் பொள்ளாச்சி சென்று பணத்தை வசூல் செய்து விட்டு வரும் வழியில், பொங்கலுார், அவிநாசி பாளையத்தில் வேனை நிறுத்திவிட்டு டீ சாப்பிட சென்றார். பின், வந்து பார்த்த பொழுது வேனில் வைத்திருந்த, 19.54 லட்சம் ரூபாயை காணவில்லை.

இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், கடந்த மே, 5ல் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபு, 26 என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஐந்து லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அவருடன் பணத்தை திருடி சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவிநாசிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, சந்தேகத்துக்கிடமான நபரை பிடித்து விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் மேலும் விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் ராமு, 25 என்பதும், பணம் திருடிய வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News