உள்ளூர் செய்திகள்

புதிதாக இணைந்தவர்களை அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி சால்வை அணிவித்து வரவேற்ற காட்சி.

நெருப்பெரிச்சல் பகுதி அ.ம.மு.க. பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்

Published On 2022-09-27 07:09 GMT   |   Update On 2022-09-27 07:09 GMT
  • 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் பகுதி செயலாளர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
  • திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

திருப்பூர் :

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதி கழகத்திற்குட்பட்ட 6,7,8,16 ஆகிய வார்டுகளுக்கு நிர்வாகிகள் தேர்வு மற்றும் பொது உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் சுகம் வீர.கந்தசாமி ஏற்பாட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் பாலுசாமி தலைமை தாங்கினார். நெருப்பெரிச்சல் பகுதி செயலாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் அ.ம.மு.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் அ.விசாலாட்சி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி பேசினார்.

மேலும் கட்சியில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகியும், புதிதாக இணைந்தவர்களையும் விசாலாட்சி சால்வை அணிவித்து வரவேற்றார். இதில் பகுதி கழக நிர்வாகிகள் ஜெயராஜ், ராஜாங்கம், கீதா, கருப்புசாமி, கோகுலம் மணி, சின்னக்காளை, கவியரசு, சரவணகுமார், பிரியானந்த், நாகேந்திரகுமார், ராஜேந்திரன், மகேஷ்குமார், சஞ்சீவ், சிவகுமார், கோபிநாத், சீதா, மனோன்மணி, பாரதி, ஸ்ரீதேவி, ஜெயகாந்த், செந்தில்குமார், சவுந்திரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News