உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் சந்தை திட்டம் - விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு

Published On 2023-03-26 05:52 GMT   |   Update On 2023-03-26 05:52 GMT
  • திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்படும் தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் பொருளீட்டுக்கடன் வசதிகளை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வனிதா கூறியதாவது:- திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இ-நாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் விளைப்பொருட்களுக்கு அதிக விலை கிடைப்பதோடு கொள்முதல் செய்யப்படும் விளைப்பொருளுக்குரிய தொகை, உடனடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

வேளாண் விளைப்பொருட்கள் விலை வீழ்ச்சியடையும் போது விளைபொருட்களை குறைந்த வாடகையில் 6 மாதம் வரை பாதுகாப்பாக இருப்பு வைத்து விலை உயரும் போது விற்பனை செய்யும் வகையில் கிடங்கு வசதியும் உள்ளது.கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு பொருளீட்டு கடன் வசதியும் உள்ளது. விவசாயிகளுக்கு பொருளீட்டு கடனாக 9 சதவீத வட்டியில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News