உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம்- பொதுமக்கள் புகார்

Published On 2023-10-17 07:12 GMT   |   Update On 2023-10-17 07:12 GMT

குன்னத்தூர்:

குன்னத்தூர் சித்தாண்டி பாளையத்தில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. கடந்த வாரம் இந்த கடையில் வாங்கப்பட்ட ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதி பொதுமக்கள் கலப்படம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அரிசியை தனியாக எடுத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளனர்.

ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பிளாஸ்டிக் அரிசியை கலப்படம் செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News