உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினரை பணியமர்த்திய3 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை

Published On 2023-09-05 07:06 GMT   |   Update On 2023-09-05 07:06 GMT
  • மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்
  • 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர்

 திருப்பூர் : 

தொழிலாளர் ஆணையர்(சென்னை) அதுல்ஆனந்த் அறிவுரைப்படி, மாவட்ட ெதாழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ஜெயக்குமார் தலைமையில் திருப்பூர் மாவட்ட தடுப்பு படையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சைல்டு லைன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுடன் இணைந்து குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றும் நோக்கில் மாதந்தோறும் சிறப்பு ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் ஒரு கடையில் ஒரு குழந்தை தொழிலாளியும், இறைச்சி மற்றும் மருந்து கடைகளில் தலா ஒரு வளரிளம் பருவத்தினர் என மொத்தம் 3 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தொழிலாளர்களை பணிக்கு அமா்த்திய உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை திருப்பூர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News