உள்ளூர் செய்திகள்

பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டிய காட்சி.

அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் கொட்டிய தண்ணீர்

Published On 2023-02-07 08:03 GMT   |   Update On 2023-02-07 08:03 GMT
  • மேட்டுப்பாளையத்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
  • பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

அவினாசி :

அவினாசி அருகே குடிநீர் குழாய் உடைந்து நீர்வீழ்ச்சி போல் தண்ணீர் கொட்டியது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளைய த்திலிருந்து அவினாசி, திருமுருகன்பூண்டி, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பூமிக்குள் ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவினாசி மங்கலம் ரோட்டில் நேற்று கருணை பாளையம் பிரிவு அருகே பூமிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் அருவிபோல் கொட்டியது.

இதுபற்றி தகவல் அறிந்த திருப்பூர் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடம் வந்து குழாய் உடைப்பை சரிசெய்தனர்.

Tags:    

Similar News