உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

நல்லதங்காள் ஓடையில் மின் கம்பம் அமைக்க தடை விதிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

Published On 2023-11-05 04:51 GMT   |   Update On 2023-11-05 04:51 GMT
  • தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா்.
  • நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாராபுரம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தின் மின் கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியா் கோவிந்தசாமியிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளா் ரா.பால சுப்பிரமணியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் வட்டம், பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காள் ஓடையின் நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா். ஆற்றின் கரைகளை சேதப்படுத்துதல் மற்றும் தண்ணீரின் போக்கை திசை திருப்புதல் போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும்.

எனவே நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை அமைப்பதற்கு உடனடியாக விதிக்க வேண்டும். மேலும் நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News