உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
- தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
வாணியம்பாடி:
வாணியம்பாடி நேதாஜி நகர் வடக்கு பகுதி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 32). இவர் தொடர்ந்து அடிதடியில் ஈடுபட்டதால் கடந்த 17-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜசேகர் தொடர்ந்து அடிதடி செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் ராஜசேகரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.