உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி பகுதியில் நடைபெறும் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

நாட்டறம்பள்ளி பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு

Published On 2022-12-04 09:29 GMT   |   Update On 2022-12-04 09:29 GMT
  • திருப்பத்தூர் கோட்டாட்சியர் ஆய்வு
  • அதிகாரிகள் உடன் இருந்தனர்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் இன்று நடைபெறும் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையொட்டி திருப்பத்தூர் மாவட்ட நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கிராம உதவியாளர் தேர்வு நடைபெறுயுள்ளது இதனையடுத்து நேற்று தேர்வு நடைபெறும் மையங்களை திருப்பத்தூர் கோட்டாட்சியர் லட்சுமி தலைமையில் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது நாட்டறம்பள்ளி தாசில்தார் க.குமார், மண்டல துணை வட்டாட்சியர் ராஜேஷ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சித்ரா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவை பிரிவு சேர்ந்த அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News