- கணவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஆம்பூர்:
வேலூர் மாவட்டம் கருக்கம்பத்தூர் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாசம் கூலி தொழிலாளி இவரது மனைவி காந்திமதி வயது (47).
இருவரும் தங்களது பைக் மூலம் வாணியம்பாடி தாலுகா புத்து முத்துமாரியம்மன் கோவில் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று மாலை வேலூர் நோக்கி இருவரும் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆம்பூர் அடுத்த கன்னியாபுரம் தேசிய நெடுஞ்சாலை சென்று போது ஆம்பூரில் இருந்து வேலூர் நேக்கி சென்ற கனரக லாரி இவர்கள் ஓட்டிவந்த பைக் மீது ேமாதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட லாரியின் டயரில் காந்திமதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். பிரகாசம் படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காந்திமதியின் உடலை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
படுகாயம் அடைந்த பிரகாசம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ேமலும் மேலும் இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.