உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூரில் 70 மில்லி மீட்டர் மழை பதிவு

Published On 2023-09-18 08:34 GMT   |   Update On 2023-09-18 08:34 GMT
  • குளிர்ச்சியான சூழல் நிலவியது
  • விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஜனதாபுறம், செட்டியப்பனூர், நியூடவுன், கச்சேரி சாலை, கொடையாஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்தது.

இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி திருப்பத்தூர் சுகர் மில் பகுதியில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதே போல் நாட்டறம்பள்ளியில் 62 மில்லி மீட்டர், திருப்பத்தூரில் 57.60 மில்லி மீட்டர், ஆலங்காயத்தில் 49 மில்லி மீட்டர், ஆம்பூரில் 43 மில்லி மீட்டர், ஆம்பூர் சுகர் மில் பகுதியில் 35.80 மில்லி மீட்டர், வாணியம்பாடியில் 32 மில்லி மீட்டர் மழை பதிவானது.

Tags:    

Similar News