உள்ளூர் செய்திகள்

கோவில் உண்டியலில் கைவிட்டு பணம் திருட்டு

Published On 2022-12-05 10:06 GMT   |   Update On 2022-12-05 10:06 GMT
  • ஆம்பூர் வாலிபர் கைது
  • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது சிக்கினார்

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன், பி கஸ்பா, மண்டைகரை பகுதியில் சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கஸ்பா பகுதியை சேர்ந்த பாபு (வயது 33) என்பவர் கோவிலுக்குள் சென்று உண்டியலில் கைவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தப்பி சென்றார்.

இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது உண்டியலில் கைவிட்டு பணத்தை திருடி சென்றது பாபு என தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

Tags:    

Similar News