உள்ளூர் செய்திகள்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த 7½ டன் ரேசன் அரிசி பறிமுதல்
- பெண் கைது
- வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கருப்பனூர் பகுதியை சேர்ந்த ரஞ்சித் இவரது மனைவி சென்னம்மாள் (வயது 36).
இவர் வீட்டில் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வெளி மாநிலத்தி ற்கு கடத்தி வருவதாக வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா சப்- இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் சென்னம்மாள் வீட்டிற்கு சென்று சோதனை செய்து பார்த்த போது 50 கிலோ எடை கொண்ட 154 மூட்டைகள் என மொத்தம் 7,550 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
மேலும் சென்னம்மாளை கைது செய்து வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை திருப்பத்தூர் தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.