உள்ளூர் செய்திகள்

குடியிருப்பு பகுதியில் நுழைந்த புள்ளி மான்கள் மீட்பு

Published On 2023-07-16 08:46 GMT   |   Update On 2023-07-16 08:46 GMT
  • வனத்துறையினர் மீட்டனர்
  • வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

ஆம்பூர்:

ஆம்பூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் ்காட்டு எருமை, புள்ளி மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி, கரடி உள்ளிட்ட உயிரினங்கள்அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.

வன விலங்குகள் தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள், விடுவதில்லை துரத்தி சென்று அவற்றை வேட்டையாடுகின்றன.

மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதிக்கு உயிருடன் செல்வதில்லை. பல நேரங்களில் நாய் கடித்தும், வாகனங்களில் அடிப்பட்டு பயத்தாலும் திடீரென இறந்து விடுகின்றது.

இந்த நிலையில் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதிக்கு 2 புள்ளி மாண்கள் தண்ணீர் தேடி வந்தன. அங்கு ரேசன் கடை எதிரே உள்ள வளாகத்தில் வனப்பகுதிக்கு திரும்பி செல்ல வழிதெரியாமல் சுற்றித்திரிந்தன.

இதுகுறித்து அந்த பகுதிமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, 2 புள்ளி மான்களையும் மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

இதுபோல் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாக்க நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News