உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2023-03-04 10:01 GMT   |   Update On 2023-03-04 10:01 GMT
  • கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது
  • பக்தர்களுக்கு அன்னதானம்

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூர் ஆத்துமேடு பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் முதல் கால பூஜை கணபதி ஹோமம் தொடங்கி மாரியம்மனுக்கு அஷ்டபந்தனை சாற்றுதல் தாய் வீட்டு சீர்வரிசை யாகசாலை வேள்வி நடைபெற்று பூர்ணாஹூதி நிறைவேற்றி மேல தாளங்கள் முழங்க கலச புறப்பாடு செய்து கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

கோவிலில் உள்ள கோட்டை மாரியம்மன் க்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகம் விழாவை காண நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆத்துமேடு ஊர் பொதுமக்கள் மிகவும் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News