உள்ளூர் செய்திகள்
ரூ.17.43 லட்சத்தில் சமையலறை கட்டுமான பணி
- கலெக்டர் ஆய்வு
- தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் நாட்டறம்பள்ளி அருகே மல்லபள்ளி ஊராட்சி ஏரியூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமையலறை கட்டுமான பணியை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகள் விரைந்து கட்டவும் தரமானதாக கட்டிடங்கள் கட்டவேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விஜயகுமாரி, ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யாசதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேசன், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். கே. சதிஷ் குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.