உள்ளூர் செய்திகள்

ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகம் எதிரே துப்புரவு பணியாளர்கள் தர்ணா

துப்புரவு பணியாளர்கள் தரையில் அமர்ந்து தர்ணா

Published On 2022-07-25 14:47 IST   |   Update On 2022-07-25 14:47:00 IST
  • சம்பளம் வழங்காததால் ஆத்திரம்
  • அதிகாரி பேச்சுவார்த்தையில் உடன்பாடு

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு முன்கூட்டியே தொழிலாளர்களுக்கான சம்பளத் தொகையை 5-ந்தேதி முதல் 10-ந் தேதிக்குள் காசோலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கடந்த மாத சம்பளமும் இந்த மாத (ஜூலை) சம்பளமும் வழங்கவில்லையாம்.

இதனால் இந்த மாதம் 25 தேதி ஆகியும் சம்பளம் வழங்காததால் ஆத்திரம் அடைந்த ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகராட்சி ஆணையாளர் பழனி, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ம.அன்பழகன், உள்ளிட்டோர் தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

மேலும் ஒப்பந்ததாரரை வரவழைத்து 2 மாத சம்பளமும் இன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து துப்புறு தொழிலாளர்கள் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News