உள்ளூர் செய்திகள்

ரூ.3.80 கோடியில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகள்

Published On 2023-02-22 09:40 GMT   |   Update On 2023-02-22 09:40 GMT
  • கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
  • விரைந்து கட்டி முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மின்னூர் ஊராட்சி பகுதியில் இலங்கை தமிழர்களுக்காக ஊராட்சி வளர்ச்சி துறையின் சார்பாக ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பில் 76 வீடுகள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மின்னூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சின்ன பள்ளிக்குப்பம் கிராம இலங்கை தமிழர்களுக்காக ரூ.8 கோடியில் மதிப்பில் 160 வீடுகள் கட்டும் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

வீடுகளின் கட்டுமான பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை இயக்குனர் செல்வராஜ் உதவி பொறியாளர் முகேஷ் குமார், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் கரீம் ஆம்பூர் மகாலட்சுமி உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News