உள்ளூர் செய்திகள்
- வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு நடந்தது
- பக்தர்கள் ஏராளமானோர் சாமி தரிசனம்
ஆம்பூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள பிந்துமாதவர் ஆலய வைகாசி மாத பிரமோற்சவம் முன்னிட்டு இன்று காலை கருட சேவை ஊர்வலம் உற்சவம் நடந்தது.
இந்த விழாவில் வாணியம்பாடி ஆம்பூர் திருப்பத்தூர் மாவட்டம் பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.