உள்ளூர் செய்திகள்

ஓட்டலில் தீ விபத்து

Published On 2023-07-20 15:02 IST   |   Update On 2023-07-20 15:02:00 IST
  • சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து வெளியில் ஓடினர்
  • தீயணைப்பு வீரர்களும் தீயை அணைத்தனர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி பஸ் நிலையத்தில் உள்ள பிரபல தனியார் பிரியாணி ஓட்டலில் நேற்று பிற்பகல் திடீரென அடுப்பு புகை கூண்டின் மேல் பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

இதனால் அப்பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியில் ஓடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வாணியம் பாடி டவுன் போலீசாரும், தீயணைப்பு வீரர் களும் தீயை அணைத்தனர்.

சிறிது நேரத்தில் தீ அணைக்கப் பட்டதை அடுத்து வாடிக்கையாளர்கள் வழக்கமாக ஓட்டலுக்கு வந்து சாப்பிட்டுட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News