உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளியில் பேரிடர் மேலாண்மை குழு கூட்டம்

Published On 2022-12-09 15:18 IST   |   Update On 2022-12-09 15:18:00 IST
  • புயல் தாக்கம் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசனை
  • அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) மற் றும் நாளை (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள் ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவின் பேரில் நாட்டறம்பள்ளி ஒன் றிய அளவில் நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் மாண்டஸ் புயல் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பிற்ப டுத்தப்பட்ட நல அலுவலர் சரஸ்வதி தலைமை தாங்கினார்.

அப்போது அவர், மின்சா ரத்துறை, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், மருத் துவதுறை, தீயணைப்புதுறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்களிடம், வரும் 2 நாட்களில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் தாசில்தார் க.குமார், மண்டல துணை தாசில்தார் ராஜேஷ், வரு வாய் அலுவலர் அன்னலட் சுமி மற்றும் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம், ஊராட்சி மன்ற தலை வர்கள், ஊராட்சி செயலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News