உள்ளூர் செய்திகள்

பத்திரபதிவு அலுவலகம் முன்பு தர்ணா

Published On 2023-11-10 09:07 GMT   |   Update On 2023-11-10 09:07 GMT
  • பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்
  • போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஷாகிராபாத் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவருக்கு இப்ராஹிம், ரியாஸ், பயாஸ், அயாஸ் ,அக்தர், தமிஸ் என 6 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் துணை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்று அப்துல் ரஷீத்தின் பிள்ளைகள் சொத்தின் பத்திரம் குறித்து புகார் அளித்துள்ளனர். மேலும் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் என பல்வேறு இடத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்துல் ரஷீதின் மனைவி மற்றும் அவரது மகன்கள் வாணியம்பாடி துணை பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வாணியம்பாடி டவுன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News