பைக் மீது கார் மோதி கட்டிட தொழிலாளி பலி
- வேலையை முடித்து விட்டு வீடு திரும்பிய போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஆந்திரா மாநிலம் குப்பம் மல்லானூர் சிங்கார பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 40) இவர் கட்டிடம் மேஸ்திரி வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று நாட்டறம்பள்ளி அருகே வெல்லக்கல்நத்தம் பகுதியில் கட்டிட வேலை செய்துவிட்டு மீண்டும் ஆந்திரா மாநிலம் குப்பம் பகுதிக்கு செல்வதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
பைனப்பள்ளி அருகே வேலூர் கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது சென்னையிலிருந்து அதிவேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலிசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.