உள்ளூர் செய்திகள்

பிந்து மாதவ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

Published On 2023-01-02 15:20 IST   |   Update On 2023-01-02 15:20:00 IST
  • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
  • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஆம்பூர்

ஆம்பூர் துத்திப்பட்டு பிந்து மாதவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

வைகுந்த வாசல் வழியாக பிந்து மாதவர் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா! கோவிந்தா!! என கரகோஷம் எழுப்பினர். அதைதொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News