உள்ளூர் செய்திகள்
அ.ம.மு.க. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது தாக்குதல்
- தி.மு.க. பிரமுகர்கள் மீது வழக்கு பதிவு
- போலீசார் விசாரணை
ஆம்பூர் :
ஆம்பூர் அடுத்த கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமணி ராஜசேகர், அ.ம.மு.க கட்சியை சேர்ந்த இவர், தனது ஊராட்சிக் குட்பட்ட 4-வது வார்டில் உள்ள தெருவில் 200 மீட்டர் தொலைவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் புதிய கால்வாய் அமைப்பதற்காக ஆய்வு செய்து கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க நிர்வாகிகளான இளங்கோவன், குபேந்திரன் ஆகியோர் கழிவு நீர் கால்வாய் இப்பகுதியில் அமைக்ககூடாது என கூறி கைலாசகிரி ஊராட்சி மன்ற தலைவர் ரமணியின் கணவர் ராஜசேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு அவரை தாக்கியுள்ளனர்.படுகாயம் அடைந்த ராஜசேகரன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் தி.மு.க நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.