உள்ளூர் செய்திகள்
சிவன் கோவிலில் படம் எடுத்து ஆடிய நாகப்பாம்பு
- சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்
- ஏராளமான பக்தர்கள் பார்வையிட்டு சென்றனர்
ஆம்பூர்:
மாதனூர் அடுத்த கீழ்முருங்கை ஊராட்சியில் ஸ்ரீ சுயம்பு பிரம்மபுரீஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி மீது நுமார் 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு பின்னி, பிணைந்து படம் எடுத்து ஆடியது.
இதனைப் பார்த்த கிராம மக்கள் மற்றும் கோவில் பூசாரி பாம்பிற்கு கற்பூர தீபாரணை காட்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
இந்த நிகழ்வு குறித்த தகவல் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டு தீ போல் பரவியது. ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலில் நடந்த அதிசய நிகழ்வை வந்து பார்வையிட்டு சாம தரிசனம் செய்தனர்.