உள்ளூர் செய்திகள்

காப்பு காட்டில் மான் இறைச்சி சமைத்த 2 பேர் கைது

Published On 2023-03-23 09:09 GMT   |   Update On 2023-03-23 09:09 GMT
  • ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பு
  • வனக்குழுவினர் ரோந்து பணியில் சிக்கினர்

வாணியம்பாடி:

வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லைப்பகு திகளில் உள்ள மாதகடப்பா வனப்பகுதியில் வெலதிகாம ணிபெண்டா என்ற இடத் தில் வாணியம்பாடி வனச்ச ரக அலுவலர் இளங்கோவன் தலைமையில் வனக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காப்புக் காட்டில் 2 பேர் மான் இறைச்சி சமைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசா ரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் தேவராஜபுரம் பகுதியை சேர்ந்த மோகன் (வயது 50), சிந்தகமணிபெண்டாவை சேர்ந்த பாலசுப்பிரமணி (59) என தெரியவந்தது.

பின்னர் அவர்கள் 2 பேரை யும் கைது செய்த வனத்துறை யினர் அவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1லட்சம் அபராதம் விதித்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News