உள்ளூர் செய்திகள்

மது விற்ற 2 பேர் கைது

Published On 2023-06-19 09:28 GMT   |   Update On 2023-06-19 09:28 GMT
  • 25 பாட்டில்கள் பறிமுதல்
  • சிறையில் அடைப்பு

வாணியம்பாடி:

வாணியம்பாடி நியூ டவுன் சாலையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப் போது அங்கு அரசு மதுபான பாட்டில்களை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த கோனாமேடு பகுதியை சேர்ந்த சசிகுமார்(வயது26) அரவிந்த்குமார்(25) ஆகிய இருவரையும் பிடித்தனர்.

அவர்களிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News