உள்ளூர் செய்திகள்

வீடு புகுந்து 2 லேப்டாப், பணம் திருட்டு

Published On 2023-07-29 15:17 IST   |   Update On 2023-07-29 15:17:00 IST
  • கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
  • போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே நாச்சார்குப்பத்தில் வீடு புகுந்து 2 லேப்டாப் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பத்தை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் ஆம்பூரில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார்.

இவரதுவீட்டில் மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு லேப்டாப், ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை திருடிசென்றுள்ளனர்.

நேற்று இரவு மாடிக்கு சென்ற செல்வம் கதவு திறந்திருப்பதை கண்டு ஆம்பூர் தாலுகா போலீசாருக்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News