உள்ளூர் செய்திகள்
- பெண் படுகாயம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் அருகே இரட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் மோசஸ் தினகரன் இவரது மனைவி மனைவி யாமணிஜான்சிராணி (வயது 36). இவர்கள் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி கூட்டு ரோடு பகுதியில் உள்ள கார் ஷோரூமில் புதிய கார் ஒன்றை வாங்கி அதனை காரின் உரிமையாளர் ஓட்டினார்.
அப்போது ஷோரூமில் இருந்து வெளிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் நின்ற இருந்த டெமோ கார் மீது மோதி சாலையோரம் நின்று கொண்டு இருந்த கல்லூரி பஸ் மீது மோதியது.
இதில் காரின் முன் பக்கம் சேதமடைந்தது.
மேலும் காரில் இருந்த யாமினி ஜான்சிராணிக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.