உள்ளூர் செய்திகள்

திருச்சியில் நாளை மின்சாரம் நிறுத்தும்

Published On 2025-11-03 17:38 IST   |   Update On 2025-11-03 17:38:00 IST
  • காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
  • போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு,

திருச்சி:

ஸ்ரீரங்கம் கோட்டம், சிறுகனூர் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர்.பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டி மாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண்ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.

அதவத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை போசம்பட்டி, கொய்யா தோப்பு, போதாவூர், புலியூர், எட்டரை, வியாழன்மேடு, கோப்பு, தாயனூர், மல்லியம்பத்து, வாசன்நகர் விரிவாக்கம், குழுமணி, அதவத்தூர் சந்தை, முத்துபிளாட், சுண்ணாம்புக் காரன்பட்டி, பள்ளக்காடு, மன்ஜான் தோப்பு, கீரீக்கல்மேடு, செவகாடு, ஒத்தக்கடை, செங்கற்சூளை, வாசன்வேலி, சிவந்த நகர், இனியானூர், சரவணபுரம், சாந்தாபுரம், வாசன்சிட்டி, அல்லித்துறை, நாச்சிக்குறிச்சி, சோமரசம் பேட்டை, அதவத்தூர், சாய்ராம் அடுக்குமாடி குடியிருப்பு, வயலூர், பேரூர், மேலப்பட்டி, கீழ்வயலூர், முள்ளிக்கரும்பூர், புங்கனூர் ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி மன்னார்புரம் செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News