உள்ளூர் செய்திகள்

திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் துணிகர கொள்ளை

Published On 2022-10-27 13:33 IST   |   Update On 2022-10-27 13:33:00 IST
  • தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
  • கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பாக்கம் பகுதியில் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கல்லூரியை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். கல்லூரிக்கு அய்ய ந்தோப்பு பகுதியை சேர்ந்த பரந்தாமன் என்பவரும், அம்மணம்பாக்கம் ஏழுமலை என்பவரும் காவலாளியாக இருந்து ள்ளனர்.

இந்நிலையில் கணினி அறிவியல் துறை துணைத்தலைவர் பிரசன்னா, விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கணினி அறைக்கு சென்று பார்த்தபோது அறையின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த கணினி பொருட்கள் மற்றும் இரண்டு சிஸ்டம் பேட்டரி ஆகியவை திருடு போனது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் ரோசணை காவல்து றையினர் அரசு கல்லூரி அறையின் பூட்டை உடைத்து கணினி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News