உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அரபாத் நகரில் மனை வாங்கியவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்-ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை

Published On 2023-10-21 08:43 GMT   |   Update On 2023-10-21 08:44 GMT
  • திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது.
  • ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு திருவேங்கடம் தாலுகாவில் பட்டா இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டி 2 நாள் முகாம் நடந்தது. முகாமில் மலையாங்குளம் அரபாத் நகரில் மனைகள் வாங்கியுள்ள இஸ்லாமிய மக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க வலியுறுத்தி மனு அளித்துள்ளனர். மனு வழங்கிய அனைத்து ஏழை, எளிய மக்களுக்கும் பட்டா கிடைக்க செய்யும் படி அரபாத் நகர் வளர்ச்சி குழுவினர் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட ராஜா எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது தி.மு.க. தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ் அலி, அரபாத் நகர் வளர்ச்சி குழுவை சேர்ந்த அப்துல்ரசாக், சபியுல்லா ஜாபர், அப்துல் ரஹ்மான்இல்லியாஸ், காஜாமைதீன்செய்யது அலி மற்றும் தி.மு.க. 20-வார்டு பிரதிநிதி ஹசன் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News