உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் அருகே இன்று காலைகிணற்றில் விழுந்த குட்டி யானை உயிருடன் மீட்பு

Published On 2023-03-11 15:25 IST   |   Update On 2023-03-11 15:25:00 IST
  • வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.
  • அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பென்னாகரம்,  

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கட்டமடுவு பகுதியில் இன்றுகாலை குட்டியானை ஒன்று சுற்றித்திரிந்தது.

அந்த யானை திடீரென அப்பகுதி விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தது. இதனை பார்த்த விவசாயி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த குட்டியானையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். பின்னர் அந்த யானைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

Similar News