உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலையில் கார் மோதி முதியவர் பலி
- சாலையை கடக்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அடுத்த அடி அண்ணாமலை கிராமம், வேடியப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினம் (வயது50). இவர் நேற்று இரவு திருவண்ணா மலை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பாலியப்பட்டு கூட்ரோடு சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த கார் ரத்தினம் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து திருவண்ணாமலை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரத்தினம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.