உள்ளூர் செய்திகள்

சர்வதேச போதை ஒழிப்பு தின மாரத்தான் ஓட்டம்

Published On 2023-06-26 08:15 GMT   |   Update On 2023-06-26 08:15 GMT
  • திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நடந்தது
  • எஸ்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையின் சார்பில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று மினி மாரத்தான் போட்டி நடந்தது.

காலை கிரிவலப் பாதை அண்ணா ஆர்ச் முதல் காஞ்சி சாலையில் உள்ள அபய மண்டபம் வரை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இதனை திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்களை நினைவு பரிசாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் வழங்கி கவுரவித்தார்.

முன்னதாக போதைக்கு அடிமை ஆகாமல் இருப்பது குறித்தும், அதுக்கு அடிமையானவர்களை போதையில் இருந்து மீட்டெடுக்கும் வகையிலும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

Tags:    

Similar News