உள்ளூர் செய்திகள்

கார் மோதி குழந்தை பலி

Published On 2023-10-09 07:29 GMT   |   Update On 2023-10-09 07:29 GMT
  • குடியாத்தத்தை சேர்ந்த சிறுவன் உட்பட 3 பேர் படுகாயம்
  • விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்

வாணாபுரம்:

திருவண்ணாமலை அடுத்த ஆண்டியார் பாளையத்தை சேர்ந்தவர் பவுன் குமார். இவரது மனைவி எழிலரசி (28). மகன்கள் ரோஹித் (5), வர்ஜித் (3). இவர்களது உறவினரான குடியாத்தத்தை சேர்ந்த குழந்தை தர்ஷன் (7).

இந்த நிலையில் எழிலரசி உள்பட 3 குழந்தைகளும் மொபட்டில் வேலை சம்பந்தமாக நேற்று திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தென்மாத்தூர் தனியார் கல்லூரி அருகே வரும்போது எதிரே வந்த கார் எழிலரசி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு எழிலரசி மற்றும் 3 குழந்தைகளும் படுகாயம் அடைந்தனர்.

அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை வர்ஜித் பரிதா பமாக இறந்தான். மற்றவ ர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து வெறையூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வர்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த விபத்து ஏற்படுத்திச் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News