உள்ளூர் செய்திகள்

பைக்குகள் மோதல்; 2 வாலிபர்கள் பலி

Published On 2023-07-11 13:21 IST   |   Update On 2023-07-11 13:21:00 IST
  • நண்பனின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள சென்ற போது பரிதாபம்
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

வெம்பாக்கம்:

வெம்பாக்கம் அடுத்த மாமண்டூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 24). சிப்காட்டில் வேலை செய்து வந்தார்.

இவரது நண்பருக்கு நிச்சயதார்த்தம் நடப்பதால் அதில் கலந்து கொள்வதற்காக முத்து தனது பைக்கில் நேற்று மாலை வெம்பாக்கத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் என்கிற ராகவன் (வயது 20). கூலி தொழிலாளி. இவர் வெம்பாக்கம் அடுத்த சித்தாதூரில் உள்ள தனது அக்காவை பார்த்து விட்டு காஞ்சிபுரம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளக்குளம் அருகே வரும்போது இவரது பைக்கும், முத்து ஒட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதியது.

இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு முத்துவும், ராகவனும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News