உள்ளூர் செய்திகள்

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2023-09-17 09:30 GMT   |   Update On 2023-09-17 09:30 GMT
  • வளைவில் திரும்பும் போது பரிதாபம்
  • போலீசார் விசாரணை

ஆரணி:

களம்பூர் அடுத்த சென்னானந்தல் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் முருகன் (வயது 33). ஆட்டோ டிரைவர்.

இவரது மனைவி காவியா, 1 வயதில் மகன் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஆரணியிலிருந்து சென்னானந்தல் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஆட்டோவுடன் வந்து கொண்டிருந்தார்.

பெருமாள் என்பவரின் நிலத்திற்கு அருகில் ரோட்டின் வளைவில் திரும்பும் போது ஆட்டோ திடீரென நிலை தடு மாறி கவிழ்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து களம்பூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News