உள்ளூர் செய்திகள்

வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை

Published On 2024-04-12 10:21 GMT   |   Update On 2024-04-12 10:21 GMT
  • இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை.
  • வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

தஞ்சாவூா்: தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரசநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சமரச மையத்தின் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது,

நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையில் தீர்வுகாண வலியுறுத்தியும், நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

சமரசமாக தீர்வு காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News