உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ரூ.38 ஆயிரம் பொருட்கள் திருட்டு
- மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
- திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக உள்ளவர் தேன்மொழி (வயது 42). இவர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 4-ந்தேதி 150 கிலோ காப்பர் ஒயர், 250 லிட்டர் ட்ரான்ஸ்பாரம் எண்ணெய் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி விட்டனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாரின்பேரில் தேன்கனிகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம திருடர்களை தேடி வருகின்றனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.38 ஆயிரத்து 300 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.