உள்ளூர் செய்திகள்

காப்பர் வயர்கள் திருட்டு

Published On 2023-09-27 15:14 IST   |   Update On 2023-09-27 15:14:00 IST
  • இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது.
  • மின்மாற்றி மீது ஏறி மின்மாற்றி காப்பர் கம்பிகள் திருடி சென்றுள்ளனர்.

மத்தூர்,  

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி போலீஸ் நிலைய சரகம் ஆனந்தூர் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக மின்சாரம் தடைசெய்யப்பட்டது. இதையறிந்த மர்ம கும்பல் அப்பகுதியில் உள்ள மின்மாற்றி மீது ஏறி மின்மாற்றி காப்பர் கம்பிகள் திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இதுகுறித்து மின்சார துறை அதிகாரிகள் கல்லாவி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News