உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் மளிகை கடையில் திருட்டு

Published On 2022-11-22 15:01 IST   |   Update On 2022-11-22 15:01:00 IST
  • தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் மாரியப்பசாமி அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார்.
  • மர்மநபர் கடை உள்ளே சென்று ரூ.20ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்

தூத்துக்குடி:

தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆனந்த நகரை சேர்ந்தவர் மாரியப்பசாமி (வயது 55). இவர் அதே பகுதியில் தனது வீட்டுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று மாலை இவர் வீட்டின் உள்ேள சென்றிருந்தபோது கடைக்கு வந்த மர்ம நபர் கடையில் ஆள் இல்லாததை கண்டு கடை உள்ளே சென்று ரூ.20ஆயிரத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

பின்னர் கடைக்கு வந்த மாரியப்பசாமி கல்லா பெட்டி திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் கடைக்கு வந்து பணத்தை எடுத்துச் சென்றது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து அவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அந்த சிறுவன் பணத்தை தாளமுத்து நகர் சந்துரு (20)என்பவரிடம் கொடுத்தது தெரிய வந்தது. இதனைத்தொடர்ந்து சந்துருவை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News