உள்ளூர் செய்திகள்
காரைக்காலில் பெட்டிக்கடையில் திருட்டு
- சந்திரசேகரன் பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
- கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் தலத்தெரு பிள்ளையார் கோவில் மேட்டில் வசித்து வருபவர் சந்திரசேகரன். இவர், பாரதியார் சாலையில், பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். வழக்கம் போல் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கடை உள்ளே சென்று பார்த்தபோது, கல்லாவில் வைத்திருந்த ரூ.1000 மதிப்பிலான சில்லறை காசுகள் திருட்டு போய் இருந்தது. இது குறித்து, சந்திரசேகரன், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், கல்லாவில் காசுகளை திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.