உள்ளூர் செய்திகள்

சப்-இன்ஸ்பெக்டரை உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய அண்ணன் - தம்பி

Published On 2023-01-30 09:30 GMT   |   Update On 2023-01-30 09:30 GMT
  • அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.
  • அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

சேலம்:

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பரமசிவம் இவர் நேற்று இரவு அழகாபுரம் காட்டூர் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் சிக்கன் கடையில் தகராறு நடப்பதாக வந்த தகவலை அடுத்து விசாரணை நடத்த சென்றார்.

அப்போது அந்த கடையில் 2 வாலிபர்கள் குடிபோதையில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்க மறுத்து கடை உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அந்த வாலிபர்களை சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் எச்சரித்து வீட்டுக்கு போகும் படி கூறினார்,

இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும் அங்கு கீழே கடந்த உருட்டு கட்டையால் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்தை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த தகவல் அறிந்த அழகாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரமசிவத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரமசிவத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது..போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பரமசிவத்தை தாக்கியவர்கள் சேலம் அழகாபுரம் சிவாயநகர் 5-வது கிராஸ் பகுதியை சேர்ந்த கண்ணன் மகன்கள் சீனிவாசன்(27), பன்னீர்செல்வம்(25) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News