உள்ளூர் செய்திகள்

வீராணம் பகுதிகளில் கோழிக்கொண்டை பூ விளைச்சல் அமோகம்

Published On 2023-04-16 08:26 GMT   |   Update On 2023-04-16 08:26 GMT
  • கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது.
  • வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி, மங்களபுரம், வீராணம், வலசையூர், கன்னங்குறிச்சி, மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் கோழிக் கொண்டை பூச்சொடி அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தற்போது கோழிக் கொண்டை பூ சீசன் என்பதால், அதிகளவில் பூத்து வருகிறது. வீராணத்தில் கோழிக் கொண்டை சாகுபடி செய்ய ப்பட்டுள்ள இடத்தில், கோழி க்கொண்டை பூ நல்ல முறையில் வளர்ந்து ள்ளது. இங்கு பறிக்கப்படும் பூக்களை, விவசாயிகள் சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டு க்கும், வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பு கின்றனர்.

Tags:    

Similar News