உள்ளூர் செய்திகள்

வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுவதை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தற்கொலை

Published On 2023-01-06 08:26 GMT   |   Update On 2023-01-06 08:26 GMT
  • டந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார்.
  • மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். (வயது 32). கூலி தொழிலாளி. அவரது மனைவி தீபா. கடந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் திடீர் என வீட்டை விட்டு மாயமானார். இரவு முழுவதும் தனது கணவர் வீடு திரும்பாததால் தீபா அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் தீபா தனது கணவரை தேடினார். எங்கு தேடியும் கிைடக்கவில்லை.

இன்று காலை அந்த பகுதியில் உள்ள விைள நிலத்தில் சாமிநாதன் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார ணையில் சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது. 

Tags:    

Similar News