உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

Published On 2023-01-16 09:34 GMT   |   Update On 2023-01-16 09:34 GMT
  • பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
  • இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.78 அடியாக உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு தொடர்ந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவ–தால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் மழைப் பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தும் வெகுவாக குறைந்து விட்டது.

இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை–யின் நீர்மட்டம் 101.78 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 852 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு இதுவரை 1,500 கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

தடப்பள்ளி -அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 1100 கன அடியும், பவானி ஆற்றுக்கு குடிநீருக்காக 150 கன அடியும் என மொத்தம் பவானிசாகர் அணையி–லிருந்து 1,200 கன அடி வீதம் தண்ணீர் வெளியே ற்றப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News